Tuesday, December 13, 2016

கீதா வசனம்

உற்று மோந்து கண்டு கேட்டு சுவைத்து
பற்று விளைக்கும் ஐம்பலன் கண்ட இன்பம்
துற்ற மெய்மூக்கு கண்காது நாக்கிவை மேல்உயிர்
முற்ற உண்டாம் அவைவீயப் பெற்றவன் தாள்பற்று

(ஞாநேந்திரியம், கர்மேந்திரியம், மனம் இவைகளின் கூட்டறவே கிரியை. இந்த கிரியை பாபத்திலோ, புண்யத்திலோ சேர புத்தி காரணமாகிறது. புத்திதான் உயிரின் வெளிப்பாடு. அதன் நோக்கும், போக்கும் ஊழின் (முன்வினைப்) படி அமைந்தால் ஸ்வதந்ரியத்தின் - அஹங்காரத்தின் பரிணாமம். பகவத் அபிமுகராய் அவனின் ஆநுகூல்ய சங்கல்ப மடியாய் அமைந்தால் அது பிராதிகூல்ய வர்ஜனம். தளை நீங்கி தாள் சேர்க்கும்).




No comments:

Post a Comment